கென்யாவில் வாழ்ந்து வரும் என் நண்பர் பாலமுரளி.

இந்த பக்கத்தின் சூப்பர் அட்மினும் அவரே.

இவர் ஒரு சிறந்த புகைப்பட நிபுணர் மற்றும் பயண அனுபவ கட்டுரையாளர்.

2014 ல் இந்தியா சென்று வந்த பின்பு அவர் எழுதியதில் இருந்து ….

———————————————-

இந்த முறை இந்தியா சென்று வீட்டை ஒதுங்க வைக்கும் போது, கண்டு எடுத்த பொக்கிஷம்.

மகா கவியின் ஒரிஜினல் புகைப்படம்.

காரைக்குடியில் தாசன் ஸ்டுடியோவில் எடுத்தாக இருக்கலாம் என்று சொல்கிறார்.

பாரதியாரை பற்றி பள்ளிக்கூடத்தில் இரண்டு பக்கம் மட்டுமே திரும்ப திரும்ப படித்து இருப்போம். அவரை பற்றி நேரம் இருக்கும் போது படிக்கலாம்.

அவரை பற்றி சில:

அவர் முதலில் கற்றது இசை. அதனால்தான் சரஸ்வதியின் மீது கொள்ளை பிரியம்.

தன் 16 வயதிற்குள் தாய் தந்தையரை இழந்தார்.

14 வயதில் 7 வயதே உடைய செல்லம்மாளை மணந்தார்.

இவர்க்கு முதலில் engineer ஆக ஆசை இருந்ததாம்.

இவர் அதிகம் படித்தது தமிழ் நாட்டில் அல்ல.

இவருக்கு தமிழைப்போல சமஸ்கிரதம், ஹிந்தி அத்துப்படி.

1901 இல் எட்டயபுர மகாராஜா அரண்மனையில் கவிபாடும் வேலைக்கு interview அட்டெண்ட் செய்து செலக்ட் செய்தார்கள்.

பெண்ணை கடவுளாய் மதித்த மகா புருஷன். சிறுவயதில் தாயை இழந்தவனுக்கு தான் இந்த வலி தெரியும் போல.

இவர் படத்தில் பார்ப்பது போல் மழித்த முகம் கொண்டவர் இல்லை. பெரும்பாலும் தாடியுடன் அலைந்தார். முண்டாசு தலையில் எப்போதுமே இருக்கும்.

இவருக்கு இன்னொரு பெயர் முண்டாசு கவிஞர்.

பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தவர்.

தன் கடைசி 5 வருடங்களில் ஒரு வேலை உணவுகூட இல்லாமல் தண்ணீர் குடித்துவிட்டு கவிதைகள் எழுதினார்.

பாரதி தினமும் பழகிய கோவில் யானையின் பெயர் லாவண்யா. அது அவரை மிதிக்கவில்லை. முட்டி தள்ளியதில் கீழே விழுந்தவர் 3 மாதம் கழித்துதான் இறந்தார்.

இறக்கும் போதே மிக பிரபலம். ஆனால், அவர் சாவிற்கு வந்தது மொத்த நபர்கள் just 14.

இதில் 8 பேருக்கு செத்தவர் யார் என்றே தெயரியாதாம். கடைசி காரியம் செய்ய வந்தவர்கள்.

————————————————————————-

2012 ஆம் ஆண்டு, தாகூர் நூற்றாண்டு விழா வான்கோவரில் பெங்காலிகள் நடத்தினார்கள்.

ரபிந்த்ரநாத் தாகூரின் வீட்டில் வேலை பார்த்த சிறுவன் தற்போது 75 வயதில் அங்கு இருந்தார்.

என்னை பார்த்து நீங்கள் தமிழனா என்றார். ஆம் என்றேன்.

கவிதைகளை பற்றி பேசிய பின்பு என்னிடம் கேட்டார்..

மகா கவி பாரதியின் பேத்தி வான்கோவரில் தான் வசிக்கிறார்.

சந்திக்க விருப்பமா?

எங்களுக்கு உங்களிடம் இருந்து ஒரு  ஓவியம் ஒன்று தேவை என்றார்.

இன்று வரை என்னால் சந்திக்க முடியவில்லை.

ஓவியமும் தீட்டவில்லை.

ஸ்ரீதர் ஏழுமலை