உலகம் தோன்றிய நாளில் இருந்து அநீதியை பெருமளவில் சந்திக்கும் ஒரு இனம் என்றால் அது பெண் இனம் மட்டுமே. உலகம் மெதுவாக சுற்றுவதும், சூரியன் பாதி நேரம் மறைந்து இருப்பதும் உங்களுக்காகத்தான். பெரும்பாலான பெண் உரிமைகள் இந்த இருளில் கண்ணீராக வழிந்து, காலையில் சூரிய உதயத்தில் காய்ந்து போய் விடுகின்றன. 

பெண் உரிமை என்று இந்த உலகில் ஏதும் இல்லை. காரணம் எந்த உயிரினம் ஆகட்டும், அதற்கு வாழும் உரிமைக்கு உரிமை கொடுத்த சொந்தக்காரியே நீதான்.

இனியும் நீ எதையும் கேட்டு பெறாதே.

நீயாக விருப்பட்டால் கொடு.

உலகம் சுற்றுவது நின்றால்தான்
அது சுற்றுகின்றது என்றே பலருக்கு தெரியும்.
உன் கணவனையும் சேர்த்து.
Happy Women’s Day